Monday 3 July 2017

பொய் சொல்லக் கூடாது..!!

ஒரு விஞ்ஞானி புதுவகை ரோபோ ஒன்றை தயாரித்திருந்தார்.

யாராவது பொய் சொன்னால், உடனே அந்த ரோபோ கன்னத்தில் “பளார்” என்று அறையும்.

விஞ்ஞானி அதனை பரிசோதனை செய்ய தன் வீட்டிற்கு கொண்டு சென்றார்.


தன் மகனை அழைத்து, “நேத்து ஸ்கூலுக்கு போகாம எங்கடா போன..?” என்று கேட்டார்.

“இல்லப்பா நா ஸ்கூலுக்குதான் போனேன்..!!” என்றான் அவர் மகன்.

ரோபோ உடனே “பளார்..” என்று அவன் கன்னத்தில் அறைந்தது.

உடனே அந்த பையன், “ஸாரிப்பா..!! நேத்து ஸ்கூல் கட் அடிச்சிட்டு படத்துக்கு போனேன்..!!” என்றான்.

உடனே விஞ்ஞானி, “எந்த படத்துக்கு போன..?” என்று கேட்டார்.

அதற்கு அந்த பையன், “எந்திரன் படத்துக்கு..!!” என்றான்.

மறுபடியும் அந்த ரோபோ, அவர் மகனை “பளார்..!!” என்று அறைந்தது.

உடனே பையன், “ஸாரிப்பா..!! நா செக்ஸ் படம் பாக்க போனேன்..!!” என்றான்.

அதற்கு அப்பா, “அடப்பாவி..!! இந்த வயசுலேயேவா..? உன் வயசுல எனக்கெல்லாம் செக்ஸ்னாலே என்னன்னு தெரியாது..!!” என்றார்.

உடனே, “பளார்..!!” என்று விஞ்ஞானியின் கன்னத்தில் அறைந்தது ரோபோ.

அதைப் பார்த்த விஞ்ஞானியின் மனைவி சிரித்துக்கொண்டே, “உங்க பையனாச்சே, வேற எப்படி இருப்பான்..?” என்றாள்.


இப்போது ரோபோ “பளார்..!!” என்று விஞ்ஞானியின் மனைவியை அரைந்தது.