ஜானியின்
மனைவி இப்போதெல்லாம் ஜானியை நெருங்க விடுவதேயில்லை.
ஒருநாள்
ஜானி ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தான்.
அங்கே உரையாற்றியவர்,
“செக்ஸுக்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தமிருக்கிறது..!!” என்று பேசிவிட்டு, அதை நிரூபிப்பதற்காக,
“யார் யார் தினம் தினம் செக்ஸ் வச்சுக்கிறவங்க..?” என்று கேட்டார்.
கொஞ்சம்
பேர் கையைத் தூக்கினார்கள். கையைத் தூக்கியவர்கள் எல்லோரும் சந்தோஷமாக சிரித்தபடி இருந்தார்கள்.
அதன்பின்,
“யார் யார் வாரம் ஒரு தடவை வச்சுக்கிறவங்க?” என்று கேட்டார்.
சிலர் கையைத்
தூக்கினார்கள். எல்லோரும் புன்னகைத்தபடி இருந்தார்கள்.
அதன்பின்,
“யார் யார் மாதம் ஒரு தடவை வச்சுக்கிறவங்க..?” என்று கேட்டார்.
நாலைந்து
பேர் கையைத் தூக்கினார்கள். யாரிடமும் சிரிப்பும் சந்தோஷமும் இல்லை.
தான் சொல்லிய
விஷயம் நிரூபிக்கப்பட்டதில் சந்தோஷமடைந்தவர், கடைசியாக, “வருஷத்திற்கு ஒரு தடவை வச்சுக்கிறவங்க
யாராவது இருக்கீங்களா..?” என்று சத்தமாக கேட்டார்.
இப்போது
ஜானி மட்டும் கையைத் தூக்கினான். ஆனால் பயங்கர சந்தோஷமாக இருந்தான். அவன் முகத்தில்
குதூகலம் நிரம்பி வழிந்தது.
உரையாற்றிய
புரபசருக்கு ஒன்றும் புரியவில்லை.
அவர் சொன்ன
விஷயம் பொய்யாகிவிடுமோ என்று பயந்து, அவனைப் பார்த்துக் கேட்டார், “வருஷம் ஒரே ஒரு
தடவை என்கிறாய். ஆனா ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்க..?”
ஜானி குதித்துக்கொண்டே
சொன்னான், “அந்த ஒரு தடவை இன்னிக்குத்தான்..!! இன்னிக்குத்தான்..!!”